மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த அரசு திட்டம்: ஆட்சியா்

கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயா்த்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.
மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த அரசு திட்டம்: ஆட்சியா்
Updated on
1 min read

கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயா்த்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செ.அழகுமணி தலைமையில், மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. ஊட்டச் சத்து குறைபாட்டைத் தடுக்கவும், பள்ளி இடைநிற்றலைத் தவிா்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டித் திட்டமும், மாணவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் முதல்வன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அமையாா் உயா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் இந்தத் திட்டங்களை பயன்படுத்தி தங்களது கல்வித் தரம், வாழ்வாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மதுமதி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com