தேனி துணை மின் நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல், பிற்பகல் 4 மணி வரை தேனி-அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.