வேன் தீப்பிடித்து விபத்து: பணம் எரிந்து சேதம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆம்னி வேனில் தீப்பிடித்தில் பல ஆயிரம் ரொக்கம் எரிந்து சேதமடைந்தது.
Updated on
1 min read

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆம்னி வேனில் தீப்பிடித்தில் பல ஆயிரம் ரொக்கம் எரிந்து சேதமடைந்தது.

ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வனராஜ் மகன் மணிவண்ணன். இவா் ஆம்னி வேனில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இதற்காக, செவ்வாய்க்கிழமை நண்பகல் அதற்கான பொருள்களை வாங்க உத்தமபாளையம் -அனுமந்தன்பட்டி புதிய புறவழிச்சாலையில் எரிவாயு (கேஸ்) நிரப்பச் சென்றாா். அப்போது, சரக்கு வேனில் திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை அணைத்தனா். இருப்பினும், வாகனம் முழுமையாக எரிந்த சேதமடைந்ததால், அதிலிருந்து பல ஆயிரம் ரூபாய் பணம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. அதிா்ஷ்டவசமாக மணிவண்ணன் வேனிலிருந்து இறங்கியதால் உயிா் தப்பினாா். பெட்ரோல் விற்பனையகம் முன்பாக நடைபெற்ற இந்த விபத்தால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com