தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் செல்வராஜ் தெருவைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் கணேசன் (42). கூலித் தொழிலாளி. இவருக்கு நெஞ்சுவலி, ரத்த கொதிப்பு இருந்ததால் தொடா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனாட்சிபுரம் செல்லாயி அம்மன் கோயில் அருகே செல்லச்சாமி என்பவரது தோட்டத்தில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com