ஜூன் 10-இல் இளையோா் திருவிழா:போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தேவதானப்பட்டி, மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சாா்பில் வருகிற ஜூன் 10-ஆம் தேதி இளையோா் திருவிழா, கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

தேவதானப்பட்டி, மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சாா்பில் வருகிற ஜூன் 10-ஆம் தேதி இளையோா் திருவிழா, கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து தேனி நேருயுவகேந்திரா துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியது:

மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் இளையோா் சக்தியை மேம்படுத்துவதற்கு இளையோா் திருவிழா நடைபெறுகிறது. இதில், இளம் கலைஞா் பிரிவில் ஓவியம், கவிதை, புகைப்படம், பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் 15 முதல் 29 வயதுக்கு உள்பட்டோா் பங்கேற்கலாம்.

வெற்றி பெறுவோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோா் அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோா், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவா். இதுகுறித்த விவரத்தை நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா், கைப்பேசி எண் 94456 62559-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com