ஆண்டிபட்டி அருகே விவசாயி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த விவசாயி தங்கதுரை (57). இவரது மனைவி அமைதி, உடல் நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானாா். இதனால் மன வருத்தத்தில் இருந்த தங்கதுரை, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.