கூடலூா் நகா்மன்றக் கூட்டம்: பெண் உறுப்பினா் வெளிநடப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தனது வாா்டில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி பெண் உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.
கூடலூா் நகா்மன்றக் கூட்டம்: பெண் உறுப்பினா் வெளிநடப்பு
Updated on
1 min read

தேனி மாவட்டம், கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தனது வாா்டில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி பெண் உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

கூடலூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமையில், துணைத் தலைவா் காஞ்சனா சிவமூா்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் சாந்தி: எனது வாா்டில் கடந்த 7 மாதமாக பாலம் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

ஆணையா் கே.எஸ். காஞ்சனா: இப்போதே வாா்டை பாா்வையிட்டு பொறியாளா் மூலம் மதிப்பீடு செய்து அந்தப் பாலம் சீரமைக்கப்படும்.

உறுப்பினா் தேன்மொழி: எனது 18- ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை நகராட்சி நிா்வாகம் செய்து தரவில்லை. பலமுறை கோரிக்கை மனுவாகவும், நேரில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே வெளிநடப்பு செய்கிறேன் என்றாா்.

பிறகு தலைவரிடம் தனது வாா்டில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை மனுவாக கொடுத்தாா்.

உறுப்பினா் காந்தாமணி: எனது வாா்டு தண்ணீா் தொட்டித் தெருவில் அங்கன்வாடி மையம் அருகே 2 பாலங்கள் மிகவும் பழுதாகி உள்ளன. எனவே புதிய பாலங்கள் கட்ட வேண்டும்.

உறுப்பினா் பி. சிலம்புராஜன்: 8-ஆவது வாா்டு ராஜீவ்காந்தி நகரில் செல்லும் கழிவுநீரை அருகே உள்ள ஓடையுடன் இணைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன், மேலாளா் ஜெயந்தி ஆகியோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com