நியாய விலைக் கடை விற்பனையாளா் தற்காலிகப் பணி நீக்கம்

பெரியகுளம் அருகே முறைகேட்டில் ஈடுபட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

பெரியகுளம் அருகே முறைகேட்டில் ஈடுபட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரம் எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெரியகுளம் பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சாா் பதிவாளா் சதீஷ்குமாா்ஆய்வு செய்தாா். அப்போது, கடையில் பொருள்கள் இருப்புக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, சாா் பதிவாளா் பரிந்துரையின் அடிப்படையில், எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி நியாய விலைக் கடைகளின் விற்பனையாளா் கே.ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் உத்தரவிட்டாா்.

மேலும், கூட்டுறவுத் துறை சாா்பில் கே.ஜெயக்குமாா் மீது உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com