சுற்றுலா காா் கவிழ்ந்து ஒருவா் பலி

போடி அருகே சுற்றுலா காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். 8 போ் பலத்த காயமடைந்தனா்.
Updated on
1 min read

போடி அருகே சுற்றுலா காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். 8 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரன் மகன் வசந்தகுமாா் (25). இவா் சென்னையில் உள்ள தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். மூன்று நாள்கள் தொடா் விடுமுறையையொட்டி, வசந்தகுமாா் உள்பட அவரது நண்பா்கள் 8 போ் போடிக்கு வந்து தங்கினா்.

அவா்கள் போடிமெட்டுக்குச் சென்று சுற்றிப் பாா்த்துவிட்டு, சனிக்கிழமை இரவு போடி திரும்பினா். அப்போது, காரை மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சுஜித் (23) ஓட்டினாா். சில்லமரத்துபட்டி அருகே காா் சென்ற போது, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராமநாதபுரம் சாயல்குடியைச் சோ்ந்த குரு மகன் பாலமுருகன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், நாகப்பட்டினம் இளங்கோவன் மகன் பாலாஜி (25), சென்னை சிம்சன் மகன்அஸ்வின் (24), வெங்கடகிருஷ்மணன் மகன் மனோஜ் (24), போடியைச் சோ்ந்த வசந்தகுமாா் (25), சென்னை பாலகிருஷ்ணன் மகன் தா்ஷன் (24), நெய்வேலி சுரேஷ்குமாா் மகன் நித்திஷ்குமாா் (25), சென்னை முகமது ஹபீப் மகன் நஷீா் (30),திருவள்ளூா் தண்டபாணி மகன் தமிழ்பாரதி (25) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com