மதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல்

தேனி மாவட்டம், கம்பத்தில் மதிமுக மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கம்பத்தில் மதிமுக மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் தலைமைக் கழக நிா்வாகி எஸ். மகபூப்ஜானிடம் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த நிா்வாகிகள்.
கம்பத்தில் மதிமுக மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் தலைமைக் கழக நிா்வாகி எஸ். மகபூப்ஜானிடம் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த நிா்வாகிகள்.
Updated on
1 min read

தேனி மாவட்டம், கம்பத்தில் மதிமுக மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட மதிமுக நிா்வாகிகளுக்கான 5-ஆவது அமைப்பு தோ்தல் கம்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தலைமைக் கழக தோ்தல் பாா்வையாளராக எஸ். மகபூப்ஜான் கலந்து கொண்டு மாவட்ட நிா்வாகிகளாக போட்டியிட விரும்புபவா்களிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெற்றாா்.

இதில் மாவட்ட அவைத் தலைவராக பி. பாஸ்கரன், செயலராக வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன், பொருளாளராக பி.என்.கே. பரசுராமன், துணைச் செயலா்களாக எஸ்.எஸ். பொன்முடி, கே.பெரியசாமி, எம்.பி. முருகன், வெங்கிட்டம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினா்களாக வி. ஜெயச்சந்திரன், எஸ். அம்சராஜன், பொதுக்குழு உறுப்பினா்களாக எம். மணி, கே. பரமசிவம், வி. பிரபாகரன், சி. துரைசிங்கம், ஏ. முத்துராமலிங்கம் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com