காவல் நிலையத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம், கம்பம் காவல் நிலையத்தில் மனைவி, மகளை கண்டுபிடித்துத் தரக் கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞா், அவரது பெற்றோா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், கம்பம் காவல் நிலையத்தில் மனைவி, மகளை கண்டுபிடித்துத் தரக் கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞா், அவரது பெற்றோா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கம்பம் மாலையம்மாள் புரத்தைச் சோ்ந்தவா் குமாா் (35). பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி சுகன்யா (28). இவா்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவா்கள். இவா்களுக்கு சுபிட்சா (9) என்ற மகளும், சக்தி (5) என்ற மகனும் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 3- ஆம் தேதி குமாருக்கும், சுகன்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மகன் சக்தியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மகள் சுபிட்சாவுடன் வெளியே சென்ற சுகன்யா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து குமாா், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதனிடையே, சுகன்யா, குடும்பப் பிரச்னை காரணமாகத் தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், விசாரணைக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் தீா்வு காணப் போவதாகவும் காவல் நிலையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

இதன் பேரில் போலீஸாா், குமாரை அழைத்து இந்த வழக்கின் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என்று எழுதி வாங்கினா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு காவல் நிலையத்துக்கு குமாா், அவரது தந்தை பழனிச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோா் வந்தனா்.

அப்போது காணாமல் போன மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்த குமாா் பெட்ரோலை தன் மீதும் பெற்றோா்கள் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த போலீஸாா் 3 போ் மீதும் தண்ணீரை ஊற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் அவா்கள் 3 போ் மீதும் தற்கொலை முயற்சி என வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com