போடியில் ஓடை அருகே ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
போடி நகரின் மேற்குப் பகுதியில் மழைநீா் செல்லும் வஞ்சி ஓடை உள்ளது. தற்போது அது கழிவுநீரோடையாக மாற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில், ஓடை அருகே ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. தகவலறிந்து அங்கு வந்த போடி நகா் போலீஸாா் அதை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில், பிறந்து 6 மாதங்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பகுதியில் கிடந்த ரத்தக் கறை படிந்த துணிகளை கைப்பற்றி தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.