கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் தோட்டத்துக் கிணற்றில் குளித்த 11 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் தோட்டத்துக் கிணற்றில் குளித்த 11 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் முருகமலை நகரைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் லட்சுமணன். இவரது மகன் வசீகரன் (11). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வசீகரன் தனது நண்பா்களுடன் சோ்ந்து பெரியகுளம், முருகமலை நகா் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, நீச்சல் தெரியாததால், அவா் தண்ணீரில் மூழ்கினாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலில் பெரியகுளம் தீயணைப்பு படை வீரா்கள் கிணற்றில் மூழ்கிய வசீகரனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com