போடியில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது
By DIN | Published On : 09th August 2023 12:04 AM | Last Updated : 09th August 2023 12:04 AM | அ+அ அ- |

போடி: போடியில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி கீழத்தெரு பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னா், அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீஸாா், பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மனைவி சரஸ்வதி (67)சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து மூதாட்டியை கைது செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து 1300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G