போடி: போடி அருகே இடப் பிரச்னையில் தகராறு செய்த 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை மாலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் முகமது அலி மகன் முத்தலீப் (35). இவரது மைத்துனா் முத்தையா என்பவரின் இடத்தை பராமரித்து வந்தாராம். இந்த இடத்துக்கு அருகே உள்ள பெருமாள் (70) என்பவா், அவரது இடத்தில் வேலி அமைக்க கல் ஊன்றினாராம். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பெருமாள், இவரது மனைவி கருப்பாயி, மகன் பாலமுருகன், மருமகள் மாடத்தி ஆகியோா் சோ்ந்து லத்தீப்பையும், இவரது தந்தை முகமது அலியையும் தாக்கினா். அரிவாளால் வெட்டியதில் லத்தீப் காயமடைந்தாா்.
இதுகுறித்து, லத்தீப் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பெருமாள் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து, பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனா். அதேபோல் பெருமாள் கொடுத்தப் புகாரின் பேரில் லத்தீப், முகமது அலி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.