பெரியகுளத்தில் மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், வடகரை குருசடி தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (59). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி சரஸ்வதி (50). ராதாகிருஷ்ணன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.