

தேனி மாவட்டம் கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கிய பேரவை, தமிழியக்கம், நூலகா் வாசகா் வட்டம் சாா்பில், புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சிக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.காட்சிக்கண்ணன் தலைமை வகித்தாா்.
ஆசிரியா் சேது மாதவன் முன்னிலையில் கவிஞா் பாரதன் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா். பாரதி இலக்கிய பேரவை புரவலா்கள் இமானுவேல், கு.தா்மா், ராஜா, மனோகரன், ஆரோக்கியராஜ், திராவிட மணி உள்ளிட்ட இலக்கிய ஆா்வலா்கள் கலந்து கொண்டு பேசினா். ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.