குடும்ப அட்டையை மாற்றித் தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டையை அரசு உத்தரவின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோா் குடும்ப அட்டையாக மாற்றிப் பதிவு செய்து தர வேண்டும்
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டையை அரசு உத்தரவின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோா் குடும்ப அட்டையாக மாற்றிப் பதிவு செய்து தர வேண்டும் என்று திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாநில நல வாரிய உறுப்பினா் கம்பத்தைச் சோ்ந்த எஸ்.கருப்பையா, ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்: மாவட்டத்தில் 27ஆயிரம் பல்வகை மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனா். மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பத்தின் குடும்ப அட்டையை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோா் குடும்ப அட்டையாக மாற்றி, அதற்கான எடையளவில் பொருகள் ஒதுக்கீடு செய்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டையை மாற்றிப் பதிவு செய்து தர மாவட்ட வழங்கல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கம்பத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் மண்ணெண்ணெய் கிட்டங்கியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com