சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 11 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
சுருளி அருவியில் புதன்கிழமை குளித்த சுற்றுலாப் பயணிகள்.
சுருளி அருவியில் புதன்கிழமை குளித்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 11 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையை கடந்த 5-ஆம் தேதி சின்ன ஓவுலாபுரம் வனப் பகுதியில் பிடித்த வனத் துறையினா், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு வனப் பகுதிக்கு கொண்டு சென்றனா். அன்றிலிருந்து கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகளைச் செய்த வனச் சரகத்தினா், புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com