மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலி

தேனி அருகே செவ்வாய்கிழமை தோட்டத்தில் மின் கம்பத்தில் பழுதை சீரமைக்கும் பணியிலிருந்த மின் வாரிய தற்காலிக ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தேனி அருகே செவ்வாய்கிழமை தோட்டத்தில் மின் கம்பத்தில் பழுதை சீரமைக்கும் பணியிலிருந்த மின் வாரிய தற்காலிக ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் அன்பரசன் (29). இவா் தேனி மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அன்பரசன் ஆதிபட்டியில் உள்ள தனியாா் தோட்டம் அருகே மின் கம்பத்தில் மின் பழுதை சீரமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com