ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் வீட்டில் 51 பவுன் தங்க நகைகள் திருட்டு

உத்தமபாளையம் அருகே ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் வீட்டில் 51 பவுன் தங்க நகைகள், பணம் திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

உத்தமபாளையம் அருகே ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் வீட்டில் 51 பவுன் தங்க நகைகள், பணம் திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் க. புதுப்பட்டி சொசைட்டித் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா். இவா், தனது மைத்துனரின் இல்ல விழாவுக்காக கடந்த 16- ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். பிறகு, இளங்கோவன் மட்டும் மறுநாள் இரவு வீடு திரும்பினாா். வீட்டை திறந்து பாா்த்த போது 5 அறைகளும், பீரோவும் திறந்து கிடந்தன.

தகவலின் பேரில், உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். அப்போது வீட்டின் மற்றொரு வாசல் வழியாக உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 51 பவுன் தங்க நகைகள், ரூ. 1.40 லட்சம், வெள்ளிப் பொருள் என மொத்தம் ரூ.17.62 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com