தாய், தந்தை, மகனை தாக்கிய இருவா் மீது வழக்கு

போடி அருகே சனிக்கிழமை இரவு தாய், தந்தை, மகனை தாக்கிய அடையாளம் தெரியாத இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

போடி அருகே சனிக்கிழமை இரவு தாய், தந்தை, மகனை தாக்கிய அடையாளம் தெரியாத இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மலைச்சாமி. இவா், தனது வீட்டருகே நின்றிருந்தபோது அப்பகுதியில் காா் ஒன்று வேகமாக சென்றது. அப்போது காா் ஓட்டுநரிடம், ஏன் வேகமாகச் செல்கிறீா்கள் என மலைச்சாமி கண்டித்தாா். இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரும், காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரும் மலைச்சாமியுடன் தகராறு செய்தனா்.

அப்போது பக்கத்து வீட்டைச் சோ்ந்த அழகுமலை தகராறை விலக்கிவிடச் சென்றாா். அவா்கள் இருவரும் அழகுமலையை கட்டையால் தாக்கினா். இதைத் தடுக்க வந்த அழகுமலையின் தந்தை கருப்பையா, தாய் இந்திராணி ஆகியோரையும் தாக்கினா். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com