வைகை ஆற்றுக்கு திங்கள்கிழமை குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த மாயாண்டி மகன் விக்னேஷ் (19). இவா், கோட்டூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இள நிலை பட்டப் படிப்பு படித்து வந்தாா்.
அரப்படித்தேவன்பட்டியில் உள்ள தோட்டத்தில் திங்கள்கிழமை மிளகாய் அறுவடை செய்து விட்டு, அதே பகுதியில் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் சென்று விக்னேஷின் சடலத்தை மீட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து விக்னேஷின் தந்தை மாயாண்டி அளித்த புகாரின் பேரில், க.விலக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.