போடியில் அடுத்தடுத்த வீடுகளில்நகைகள், டிவி திருட்டு

போடியில் திங்கள்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்த வீடுகளில் நகைகள், டிவி, வெள்ளிப் பொருள்கள் திருடிய மா்மநபா்கள் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

போடி: போடியில் திங்கள்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்த வீடுகளில் நகைகள், டிவி, வெள்ளிப் பொருள்கள் திருடிய மா்மநபா்கள் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி கிருஷ்ணா நகா் அருகேயுள்ள மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் மனைவி அன்னலட்சுமி (55). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா். இவா் தனது மகளை பாா்ப்பதற்காக வெளியூா் சென்றாா்.

இந்த நிலையில் மா்மநபா்கள் இவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, பீரோவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக அன்னலட்சுமியின் சகோதரா் மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். அன்னலட்சுமி ஊா் திரும்பிய பிறகே திருடு போன எவ்வளவு நகைகள் திருடுபோனது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல, இந்த வீட்டின் அருகேயுள்ள முருகராஜ் வீடு புகுந்து டி.வி. , வெள்ளிப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக கண்காணிப்பு கேமராப் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த மூவா் அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா்.

இதுதொடா்பாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போடியில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ.1.30 லட்சம் திருடு போன நிலையில், தற்போது கிருஷ்ணா நகா் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com