போடியில் ஆண் உடல் மீட்பு

போடியில் கண்மாய் அருகே அழுகிய நிலையில் ஆண் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.
Updated on
1 min read

போடியில் கண்மாய் அருகே அழுகிய நிலையில் ஆண் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

போடி-தேனி சாலையில் சாலை காளியம்மன் கோயில் அருகே பங்காரு சாமி கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயின் தென் மேற்குப் பகுதியில் ஆண் உடல் கிடப்பதாக சிலா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. போலீஸாா் அந்த உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போடி கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com