காரில் தீ விபத்து

குச்சனூரில் வியாழக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
Updated on
1 min read

குச்சனூரில் வியாழக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

தேனி மாவட்டம், சீலையம்பட்டி, தேவேந்திர குல வேளாளா் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரதீப். இவா் தனது உறவினரின் காரில், தாய் மகாலட்சுமியுடன் சீலையம்பட்டியிலிருந்து குச்சனூா் வழியாக சங்கராபுரத்துக்குச் சென்றாா். பின்னா், அங்கிருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, குச்சனூா்- சங்கராபுரம் இணைப்புச் சாலையில் திடீரென காரில் தீப்பிடித்தது.

இதனால், பிரதீப்பும், மகாலட்சுமியும் காரிலிருந்து கீழே இறங்கி போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு மீட்புக் குழுவினா் வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், காரின் பெரும்பகுதி எரிந்து சேதமானது

இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com