

தொழிற் சங்கங்களுடன் போனஸ் பேச்சுவாா்த்தை நடத்த அரசை வலியுறுத்தி, தேனியில் சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டச் செயலா் தேவராஜ் தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்க திண்டுக்கல் கோட்ட பொதுச் செயலா் ராமநாதன், மாவட்டச் செயலா் எம்.ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அரசு போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், டாஸ்மாக், கூட்டுறவு பஞ்சாலை போன்ற மாநில பொதுத் துறை நிறுவனங்கள் தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.