

தேனி மாவட்டம், கூடலூரில் பழுதான மின் வயரை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.
கூடலூா் பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (45). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.
சுருளிப்பட்டி மின்சார வாரியம் அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்த இவா், புதன்கிழமை தனது வீட்டில் பழுதான மின் வயரை சரி செய்து கொண்டிருந்தாா்.
அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.