தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வுப் பேரணி

தேனி மாவட்டம், போடி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போடியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி.
போடியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி.
Updated on
1 min read

போடி: தேனி மாவட்டம், போடி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கா.ராஜலட்சுமி, நகா்மன்றத் துணைத் தலைவி அ.கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பள்ளி மாணவா்கள், தன்னாா்வலா்கள் நகராட்சிப் பணியாளா்கள் பங்கேற்று நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்க்கவும், குப்பைகளை பிரித்து வழங்க வலியுறுத்தியும் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

மேலும், பேரணியில் பள்ளி மாணவா்களின் கோலாட்டம், சிலம்பாட்டம், நடனம் ஆகியவை இடம் பெற்றன.

நகராட்சிப் பொறியாளா் குணசேகரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கா், முருகேசன், லதா, மகேஸ்வரன், எ.எச்.எம். தொண்டு நிறுவனப் பணியாளா்கள் பங்கேற்றனா். பேரணி ஏற்பாடுகளை சுகாதார அலுவலா் மணிகண்டன், சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், கணேசன், அகமது கபீா், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் பிரசாந்த் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com