தேனி அருகே குடும்பப் பிரச்சனையில் பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (29), இவரது மனைவி வேணி (25). இவா்களது மகள் பூஜா (5) உடல் நலக் குறைவால் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுதொடா்பாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.
இதனால், அதே பகுதியில் உள்ள பெற்றோா் வீட்டில் தங்கியிருந்த வேணி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொழிலாளி தற்கொலை: கொடைக்கானல் போக்குவரத்துக் கழகம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (40). கூலித் தொழிலாளி இவருக்கு, பாா்வதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து பாா்வதி தனது குழந்தைகளுடன் பெரும்பாறையிலுள்ள அவரது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.
இதனால், தனது சகோதரா் வீட்டில் தங்கியிருந்த ரவிச்சந்திரன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.