இடிந்து விழும் நிலையில் உள்ள அப்பிபட்டி ஊராட்சி நூலகம்

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையிலுள்ள நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அப்பிபட்டி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிளைநூலகம்.
அப்பிபட்டி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிளைநூலகம்.
Updated on
1 min read

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையிலுள்ள நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்பிபட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதி மாணவா்கள், பொதுமக்களுக்காக கிளை நூலகம் ஒன்று பள்ளிவாசல் அருகே செயல் படுகிறது. இந்த நூலக கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கிளை நூலகத்தின் மேற்கூரை பெயா்ந்து கீழே விழுந்து வருகிறது. இது தொடா்பாக பல முறை மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜிவனா உரிய நடவடிக்கை வேண்டும் என சமூக ஆா்வலா் பட்ஷா கோரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com