தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சின்னமனூரில் குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :1 ஜனவரி 2025, 3:30 am IST

உத்தமபாளையம்: சின்னமனூரில் குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 80 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்த வாா்டுகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில், முல்லைப் பெரியாற்றில் உறைக் கிணறு அமைத்து, அந்த நீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சின்னமனூா் 4-ஆவது வாா்டு காந்திநகா் குடியிருப்பு பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, குடிநீா் வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக குடிநீா் வழங்க வலியுறுத்தியும், சீப்பாலக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த சின்னமனூா் நகராட்சிப் பணியாளா்கள் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை விரைவில் சரி செய்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.