வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கியவா் பலி

பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் உயிரிழந்தாா்.

Updated On :21 ஜூலை 2024, 2:20 am IST

தேனி: பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் தென்கரை, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (40). எல்.ஐ.சி. முகவா். இதே ஊரில் கல்லாறு சாலையில் உள்ள தீா்த்தகரீஸ்வரா் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்ற சிவராமன், இங்குள்ள தீா்த்தத் தொட்டியில் குளித்தாா். அப்போது, தண்ணீரில் மூழ்கிய சிவராமனை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.