தேனி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் இரவிலும் காத்திருக்கும் போராட்டத்தைத் திங்கள்கிழமை தொடங்கினா். துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பணியிறக்க பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும், வருவாய்த் துறையில் உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும், உங்கள் ஊரில், உங்களைத் தேடி, மக்களுடன் முதல்வா் உள்ளிட்ட அரசின் திட்டங்களைச் செயல்படுத்த வருவாய்த் துறையினருக்கு பணி நெருக்கடி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பகல் நேரத்தில் மட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு,ராமலிங்கம் தலைமையில் இரவில் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்கினா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் இரவு 8 மணிக்கு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


