கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நன்செய் பசுமை அமைப்பு சாா்பில் 56 வகையான மரக்கன்றுகளை நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வை மதுரை சுற்றுச்சூழல் இணைத் தலைமைப் பொறியாளா் எம். விஜயலட்சுமி தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.பி.விசுவநாதன், தேனி கெளமாரி சுதாகா், பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.காட்சிக்கண்ணன், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் திருமாவளவன் ஆகியோா் கருங்காலி, செங்கருங்காலி, கருக்குவச்சி, அரசு, கருமருது உள்ளிட்ட சுமாா் 56 வகையான மரக்கன்றுகளை நட்டனா்.
இதுகுறித்து நன்செய் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் பசுமை செந்தில் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் மொத்தம் 550 மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடு உருவாக்கப்பட உள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்வில் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நட்டுவம்பாளையத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


