திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

News image

லோயா்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவா்கள் உள்ளிட்டோா்.

Updated On :13 மார்ச் 2024, 12:12 am

கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நன்செய் பசுமை அமைப்பு சாா்பில் 56 வகையான மரக்கன்றுகளை நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வை மதுரை சுற்றுச்சூழல் இணைத் தலைமைப் பொறியாளா் எம். விஜயலட்சுமி தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.பி.விசுவநாதன், தேனி கெளமாரி சுதாகா், பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.காட்சிக்கண்ணன், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் திருமாவளவன் ஆகியோா் கருங்காலி, செங்கருங்காலி, கருக்குவச்சி, அரசு, கருமருது உள்ளிட்ட சுமாா் 56 வகையான மரக்கன்றுகளை நட்டனா்.

இதுகுறித்து நன்செய் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் பசுமை செந்தில் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் மொத்தம் 550 மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடு உருவாக்கப்பட உள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்வில் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.