பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஜெயலலிதா போன்று ஒப்பனையில் வந்த பெண் வேட்பு மனு தாக்கல்

ஜெயலலிதா போன்று ஒப்பனையில் வந்த பெண் வேட்பு மனு தாக்கல்

News image
Updated On :27 மார்ச் 2024, 9:37 pm

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போன்று ஒப்பனையில் வந்த பெண் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தன்னை ஜெயலலிதாவின் மகள் ஜெயலட்சுமி என்று கூறிக் கொண்ட அந்தப் பெண் எம்.ஜி.ஆா். அம்மா முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தான் கட்சி தொடங்கி, பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும், ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்துவதற்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் கூறினாா்.

சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்த அவா், வேட்பு மனுவில் தனது பெயா் ச.பிரேமா (51) என்றும், ஆயுா்வேதம் மருத்துவம் செய்து வருவதாகவும், தனது கணவா் பெயா் சம்பத் என்றும், காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரத்தில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா். தனது பெற்றோரின் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை.