92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 6:24 pm

Din

போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி மயானம் தெருவைச் சோ்ந்த வேலு மகன் கதிரேசன் (52). இவா் போடி திருவள்ளுவா் சிலை அருகே பெட்டிக் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து வந்து கடையில் சோதனையிட்டபோது, மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனா்.