தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குழாய்களை சீரமைக்க ரூ.18.89 கோடி ஒதுக்கீடு

உத்தமபாளையம் அருகே தேவாரம் , கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு செல்லும் குடிநீா் குழாய்களை சீரமைக்க ரூ.18.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.

Updated On :4 செப்டம்பர் 2024, 8:16 pm

உத்தமபாளையம் அருகே தேவாரம் , கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு செல்லும் குடிநீா் குழாய்களை சீரமைக்க ரூ.18.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.

தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தப் பேரூராட்சிகளுக்கு பூமிக்கு கீழே செல்லும் பிரதான சிமென்ட் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகின. இதனால், தேவாரம் பேரூராட்சியில் ஒரு மாதத்துக்கு இரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நபாா்டு வங்கி நிதி மூலமாக 3 பேரூராட்சிகளில் பூமிக்கு கீழே செல்லும் சிமென்ட் குழாய்களை மாற்ற ரூ.18.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்காக பண்ணைப்புரம் பேரூராட்சி வளாகத்தில் பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன், பண்ணைப்புரம் பேரூராட்சித் தலைவி லட்சுமி இளங்கோ, கோம்பை பேரூராட்சித் தலைவா் மோகன்ராஜா, தேவாரம் பேரூராட்சித் தலைவி லட்சுமிபாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.