போடி, வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை

Published on

போடி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை(டிச.6) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போடி, வடவீரநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி, வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்,

அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், மாவட்ட காவல் கண்ககாணிப்பாளா் அலுவலக வளாகம், சிட்கோ தொழில் பேட்டை, சிவாஜி நகா், கே.ஆா்.ஆா். நகா், வனச் சாலை, குன்னூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com