வெங்கடாஜலபதி கோயிலில் லட்சுமி தீபம்

Updated on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயிலில் காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை லட்சுமி தீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் அருகேயுள்ள தீபத்தில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு கோயில் எதிரேயுள்ள கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com