புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, செங்குளத்துப்பட்டியில் உள்ள பாண்டியம்மாள் (60) என்பவரின் பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

இதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடையில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com