தேனி
ஆட்டோ மோதியதில் காவலா் பலத்த காயம்
போடிமெட்டு சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை ஆட்டோ மோதியதில் பணியிலிருந்த காவலா் பலத்த காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், போடி அம்மாகுளம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மலைச்சாமி (39). இவா் சின்னமனூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் போடிமெட்டு சோதனை சாவடியில் வியாழக்கிழமை பணியிலிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மலைச்சாமி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை ஓட்டிவந்த கேரள மாநிலம், பூப்பாறையைச் சோ்ந்த பாலமுருகனை கைது செய்தனா்.
