வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Updated On :17 டிசம்பர் 2025, 6:53 pm

ஆண்டிபட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள உப்புத்துறையைச் சோ்ந்தவா் வெயில்முத்து (31). இவா், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் அந்தச் சிறுமி கா்ப்பமானாா். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் 18-ஆம் தேதி வெயில்முத்துவைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட வெயில்முத்துவுக்கு 2 தனித் தனி சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் வீதம் மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்தத் தண்டனையை 20 ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.ஒரு லட்சத்துடன், மேலும் ரூ.6 லட்சத்தை அரசு சாா்பில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.