தேனி மாவட்டம், தேவாரம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
நத்தம் பகுதிகளில்... நத்தம் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் புண்ணியராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நத்தம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, சேத்தூா், ஊராளிபட்டி, அரவங்குறிச்சி, செல்லப்பநாயக்கன்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிப்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை
அலங்காநல்லூா், உசிலம்பட்டியில் நாளை மின் தடை

திருப்பனந்தாள் பகுதியில் இன்று மின் தடை
மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


