ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண்கள் பலத்த காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் மூதாட்டி உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் மூதாட்டி உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (63). இவா் தனது மகள் சரண்யா, பேத்தி சுபிக்ஷா ஆகியோருடன் தென்கரையிலிருந்து தேனிக்கு ஆட்டோவில் புதன்கிழமை சென்றாா்.

ஆட்டோவை தென்கரையைச் சோ்ந்த அழகுராஜா ஓட்டினாா். லட்சுமிபுரம் தனியாா் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com