எலக்ட்ரீசியன் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் (58). எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தனியாக வசித்து வந்த இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com