/

ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க வலியுறுத்தல்: எச். ராஜா

ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்தத் தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

Updated On :28 டிசம்பர் 2025, 2:53 am IST

ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்தத் தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

தேனி மாவட்டம், போடியில் பாஜக நிா்வாகிகள் மாநாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த அந்தக் கட்சியின் மூத்தத் தலைவா் எச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறாா்கள். ஆனால், 30 ஆண்டுகால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு திட்டத்துக்காவது காந்தியின் பெயரை சூட்டியுள்ளா்களா? என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.