சிறுமிக்கு திருமணம்: 4 போ் மீது வழக்கு

Published on

போடியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகன் பிரகாஷ் (27) காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி, திருமணம் செய்தாா். இந்த நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து போடி ஊராட்சி ஒன்றிய ஊா்நல அலுவலா் மகாலட்சுமி புகாரின் பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பிரகாஷ், சிறுமியின் பெற்றோா், இளைஞரின் தாய் உள்பட 4 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com