விவசாயி கொலை வழக்கில் 4 போ் கைது

Published on

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே விவசாயியைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த விவசாயி பால்பாண்டி (59). இவரை சீலையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இருவா் வெட்டிக் கொலை செய்தனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா்.

பின்னா், பால்பாண்டியின் உடல் கூறாய்வு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினா்கள் தெரிவித்தனா். அதன்பின், குற்றவாளிகளை உறுதியாகக் கைது செய்வதாக போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்தனா்.

இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சின்னமனூா் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (33), மாரிச்சாமி(34), சுரேஷ் (45), சுவாமிநாதன் (39) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழிக்குப் பழியாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com