கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

Published on

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதிகளில் புதன்கிழமை (நவ.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக துரைசாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை , அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (நவ.19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com